துணுக்கு: வெளுத்துக் கட்டின குமரி!
சிலேடைக்குப் பேர் போனவர் வாகீச கலாநிதி கி.வா. ஜகந்நாதன். ஒருமுறை கி.வா.ஜ. ஒரு சொற்பொழிவில் கலந்து கொண்டார். அவருக்கு முன் குமரி அனந்தன் பேசிவிட்டு அமர்ந்தார். அடுத்துப் பேச எழுந்தார் கி.வா.ஜ. "அனந்தன் மிக அருமையாகப் பேசினார்" என்று கூறியவர், குமரி அனந்தனிடம், "நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கேட்டார். அதற்குக் குமரி அனந்தன் "வண்ணாரப்பேட்டையிலிருந்து" என்றார்.

"அதான் இப்படி வெளுத்துக் கட்டிவிட்டீர்கள்" என்றார் கி.வா.ஜ.

© TamilOnline.com