லாவண்யா பரதநாட்டிய அரங்கேற்றம்
ஆகஸ்ட் 8, 2010 அன்று குரு ஹேமா ராஜகோபால் அவர்களின் சிஷ்யை குமாரி லாவண்யாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் College of Dupage-இல் (McAninch Arts Center, Glen Ellyn, IL) நடைபெற்றது. திருமதி கிருத்திகா ராஜகோபாலன் அழகாக ஒவ்வொரு நடனத்தையும் அறிமுகம் செய்தார். நிகழ்ச்சி கம்பீர நாட்டை ராகத்தில் ஆரம்பித்து ராகம் பரஸில் தில்லானா ஆடி முடித்தார் லாவண்யா. மல்லாரியில் துவக்கி, வர்ணத்தில் மிகவும் நன்றாக ஆடி, தேவி துதிக்குச் சிறப்பாகப் பாடி ஆடி, நவரசங்களையும் முருகன் அருளால் தன் முகத்தில் தோன்றவைத்து விரகதாபத்தை நன்றாகக் காட்டி, கண்ணன் தான் வெண்ணை உண்ணவில்லை என்ற பாவத்தையும் காட்டி, தில்லானா ஆடி முடித்தாள்.

லாவண்யாவின் சகோதரர் கிஷோர் வேடிக்கை கலந்த வரவேற்புரை வழங்கினார். பெற்றோர் லக்ஷ்மி, கண்ணன் நன்றி உரைத்தனர். இந்தியாவிலிருந்து வந்திருந்த திருமதி சுசீலா ராமசாமி (வாய்ப்பாட்டு), திரு டி.எஸ். சங்கரன் (புல்லாங்குழல்), திரு ஜி. விஜயராகவன் (மிருதங்கம்) ஆகியோர் சிறப்பாகப் பக்கம் வாசித்தனர்.

பாண்டுரங்கன்,
சிகாகோ, இல்லினாய்ஸ்

© TamilOnline.com