விருந்தாளி


வாழ்க்கையில் வரும் எல்லாமும் ஒரு விருந்தாளியைப் போல நிரந்தரம் இல்லாதவை என்ற கருத்துடன் உருவாகி வரும் படம் ‘விருந்தாளி’. இப்படத்தில் நாயகனாகப் புதுமுகம் ஈஸ்வர் நடிக்கிறார். நாயகியாக அவள் பெயர் தமிழரசி படத்தில் நடித்த தியானா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், பாலாசிங், சிங்கம்புலி உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் இயக்குநர் வாட்டர்மேன், உதயசங்கரன் என்ற பெயரில் ஏற்கனவே மலையாளத் திரையுலகில் முன்னணியில் திகழ்ந்தவர். திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கதை நடக்கிறது. இதுவரை தமிழில் எத்தனையோ கிராமத்து காதல் கதைகள் வந்திருந்தாலும், அதிலிருந்து இப்படம் மாறுபட்டதாக இருக்கும் என்கிறார் வாட்டர்மேன். ஹிட் படங்கள் வரிசையில் விருந்தாளியும் கண்டிப்பாக இடம் பெறும் என்கிறது கோடம்பாக்கத்துப் பட்சி.

அரவிந்த்

© TamilOnline.com