நான்குமுனைப் போட்டி!
வரும் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்தே போட்டியிடும் என்று விஜயகாந்த் கூறி வருகிறார். தேசியக் கட்சியான பா.ஜ.க.வும் தனித்துப் போட்டி என்று கூறியுள்ளது. ஆக, வருகிற தேர்தலில் தமிழகத்தில் அ.தி.மு.க. கூட்டணி, தி.மு.க. கூட்டணி, தேசிய முற்போக்கு திராவிடக் கழகம், பா.ஜ.க. என்று நான்குமுனைப் போட்டி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. ஆனால் முக்கியப் போட்டி யாருக்கிடையே என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

தொகுப்பு: கேடிஸ்ரீ

© TamilOnline.com