மீண்டும் மலையூர் மம்பட்டியான்


பல வருடங்களுக்கு முன்னால் தியாகராஜனின் நடிப்பில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்ற படம் 'மலையூர் மம்பட்டியான்'. இப்படம் அவரது மகன் பிரசாந்த நடிப்பில் பெரிய பட்ஜட்டில் மீண்டும் தயாராகி வருகிறது. பிரசாந்த்துக்கு ஜோடியாக மீரா ஜாஸ்மினும், ஜெயமாலினி, சில்க் ஸ்மிதா நடித்த வேடங்களில் முமைத் கானும் மல்லிகா ஷெராவத்தும் நடிக்கிறார்கள். போலிஸ் அதிகாரியாக பிரகாஷ் ராஜ் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலு, ரியாஸ்கான், கோட்டா சீனிவாசராவ் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர். மம்பட்டியான் வேடத்திற்காக நீண்ட தலைமுடியுடனும், மாறுபட்ட உடல்மொழியுடன் நடித்து வருகிறார் பிரசாந்த். மைசூர், கேரளா, தமிழ்நாடு மட்டுமல்லாமல் நியூசிலாந்து, தாய்லாந்து மற்றும் கிழக்கு ஆப்பிரிக்க நாடுகளிலும் படப்பிடிப்பு நடந்துள்ளது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குவதுடன் ஆர்ட் டைரக்டர் வேலையையும் தியாகரா‌ஜனே ஏற்றிருக்கிறார். இப்படம் பிரசாந்தின் வாழ்வில் பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்கிறார் தியாகராஜன்.

அரவிந்த்

© TamilOnline.com