சிவ முருகன் கோவிலுக்காக நந்திதா ஸ்ரீராம் பரத நாட்டியம்
மே 1, 2010 அன்று கான்கார்ட் சிவ முருகன் ஆலயத்திற்கு நிதி திரட்டுவதற்காகக் குமாரி நந்திதா ஸ்ரீராம் 'நிருத்ய சந்த்யா' என்ற பரத நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை வழங்கவிருக்கிறார். வளைகுடாவின் மிகச் சிறந்த கலைஞர்களான ஆஷா ரமேஷ் (வாய்ப்பாட்டு), நாராயணன் (மிருதங்கம்), சாந்தி நாராயணன் (வயலின்) ஆகியோர் பங்கு பெற உள்ளனர். நந்திதாவின் குருவும் லாஸ்யா டான்ஸ் கம்பெனியின் கலை இயக்குனருமான வித்யா சுப்ரமணியன் நட்டுவாங்கம் செய்வார். நந்திதா, குரு வித்யா சுப்ரமணியத்திடமிருந்து ஐந்து வயது முதல் நாட்டியம் பயின்று வருவது குறிப்பிடத் தக்கது. நிகழ்ச்சிக்கு அனுமதி இலவசம்.

கோயில் வளர்ச்சிக்கான நன்கொடை வரவேற்கப்படுகின்றது. நன்கொடை தர விரும்புவோர் தொடர்பு கொள்ள, பிரேமா ஸ்ரீராம்: 408-997-6375

நாள்: மே 01, 2010
நேரம்: மாலை 4.00 மணி
இடம்: Visual and performing Arts Center (VPAC), DeAnza College, Cupertino.

© TamilOnline.com