ஆறாவது வனம்


ஒரு இளம் ஜோடியின் காதலை எதிர்த்து ஒட்டுமொத்த மக்களும் ஊரைக் காலிபண்ணிக் கொண்டு போக, கடைசியில் அந்த ஊரில் இரண்டே இரண்டு பேர் மிஞ்சுகிறார்கள். இறுதிவரை அந்த இருவர் மட்டுமே அந்த ஊரில் வசிக்கிறார்கள். உண்மையில் நடந்த உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாகி இருக்கும் படம் 'ஆறாவது வனம்'. கதாநாயகனாகக் கன்னட நடிகர் பூஷன் அறிமுகமாகிறார். நாயகி, கேரளத்து வித்யா. கதை, திரைக்கதை வசனம் எழுதி இயக்குகிறார் புவனேஷ். இசையமைப்பாளராக ஹரிபாபுவும், எடிட்டராக ஹாலிவுட்டில் வார்னர் பிரதர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிய சியானும் அறிமுகமாகின்றனர். “பாண்டவர்கள் தங்கள் வாழ்க்கையில் மிகவும் துன்பத்தை அனுபவித்தது ஆறாவது வனத்தில் நாடோடிகளாய் அலைந்த காலகட்டத்தில்தான். அதற்கு இணையான துன்பத்தை ஒரு காதல் சமாசாரத்தால் அனுபவிக்கின்றனர் ஒரு கிராமத்தினர். அது என்ன, ஏன் அப்படி ஆனது என்பதைச் சொல்வதுதான் இந்தப் படம்" என்கிறார் இயக்குநர்.

அரவிந்த்

© TamilOnline.com