சரவணபவ


உலகம் என்றும் அழியாது. முருகனருள் எல்லா அழிவுகளிலிருந்தும் இவ்வுலகைக் காத்து நிற்கும் என்ற கருத்தைக் கொண்ட பக்திப் படம் சரவணபவ. முழுக்க முழுக்க அந்தமானிலேயே தயாராகியுள்ளது. இப்படத்தில் பாலமுருகனாக மாஸ்டர் சுதாமா சபரிகிரீஸ்வரன் நடித்திருக்கிறார். அவருடன் புதுமுகங்கள் சதீஷ், செல்வராஜ், பாரதி, தேசிங்குராஜா, காளை, மீனாட்சி மைந்தன், தீபா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியிருக்கிறார் ஆதவன். பாடல்கள்: மீனாட்சி மைந்தன். இசை: இந்தியன். டி.ஆர்.எஸ். ரமணி அய்யர் மூலக்கதை எழுதி இப்படத்தைத் தயாரித்துள்ளார்.

அரவிந்த்

© TamilOnline.com