வீணா முரளி சலங்கை பூஜை


சிகாகோவில் 'நாட்யா' என்ற பரதநாட்டிய நிறுவனத்தை நடத்தி வரும் திருமதி. ஹேமா ராஜகோபாலன் அவர்களின் மாணவி வீணா முரளிக்குச் சென்னையில் சலங்கை பூஜை நடைபெற்றது. ஒன்பது வயது நிரம்பிய வீணா ஐந்து வயதிலிந்து திருமதி ஹேமாவிடம் பரதநாட்டியம் பயின்று வருகிறார்.

கச்சேரிக்கு மிருதங்க வித்வான் திரு விஜயராகவன், வயலின் மேதை திரு. சிகாமணி வாசிக்க, திருமதி பாக்கியலட்சுமி பாடினார். சங்கீத மாமணி டாக்டர் பாலமுரளிகிருஷ்ணா வீணாவை வாழ்த்தி ஆசிர்வதித்தார்.



© TamilOnline.com