SIFA தியாகராஜ ஆராதனை


பிப்ரவரி 7, 2010 அன்று சான் ஹேஸே மில்பிடாஸ் இந்திய சமுதாய மையத்தில் SIFA (South India Fine Arts) ஏற்பாடு செய்திருந்த தியாகராஜ ஆராதனை நடந்தது. சத்குரு ஸ்ரீ தியாகராஜரின் படம் மேடையை அலங்கரிக்க, காலை 8 மணி அளவில் ஆஷா ரமேஷ் அவர்கள் தலைமையில் இளம் வித்வான்கள், இசை ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் என கிட்டத்தட்ட 40 பேர் பஞ்சரத்ன கீர்த்தனைகளை பக்தி பாவத்துடன் பாடினார்கள்.

தொடர்ந்து வளைகுடாப் பகுதியில் இசை பயிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றுப் பாடினர். வயது வித்தியாசமின்றி பாடத் தெரிந்த பிறருக்கும் சந்தர்ப்பம் கொடுத்தது சிறப்பு. தொலைக்காட்சியில் Super Bowl நிகழ்ச்சியையும் விட்டுவிட்டுப் பெற்றோர் குழந்தைகளுடன் திரளாக வந்து கலந்து கொண்டனர். காலை 8 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் வேளா வேளைக்குக் கிடைத்த டிபன், காபி சென்னை சங்கீத சபா காண்டீனை நினைவுபடுத்தியது.

சீதா துரைராஜ்,
சான் ஹோஸே

© TamilOnline.com