சான் டியேகோ தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா

ஜனவரி 23, 2010 அன்று சான் டியேகோவில் பொங்கல் விழா 'பொங்கலோ பொங்கல்' என்ற உற்சாக ஒலியுடன் கொண்டாடப்பட்டது. குழந்தைகள் பல கலைநிகழ்சிகளில் பங்கேற்றதுடன் அரங்கத்துக்கும் கலகலப்பூட்டினர். சான் டியேகோ தமிழ்ப் பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சி அப்பள்ளி ஆசிரியர்களின் ஒத்துழைப்பையும், மாணாக்கரின் திறனைய்ம் காட்டுவதாக இருந்தது. 'சான் டியகோவில் பஞ்சாயத்து' நாடகத்தின் மூலம் சொல்லப்பட்டிருந்த கருத்து அனைவரையும் கவர்ந்தது. நம் கலாசாரதிற்கு அன்னியமான பொருளற்ற சுதந்திர தாகத்தைத் தணித்தது.

தமிழ் நாட்டின் அருமை பெருமைகள் குறித்த கேள்வி நேரம் செவிக்கு உணவு. மொத்தத்தில் அன்றைய தின நிகழ்ச்சிகள் செங்கரும்பாக இனித்தன.

சுபா வெங்கடேஷ்,
சான் டியேகோ

© TamilOnline.com