அட்லாண்டா தமிழ் சபை கிறிஸ்துமஸ் விழா
அட்லாண்டா தமிழ் சபை ஓய்வு நாள் பாடசாலையின் கிறிஸ்துமஸ் விழா இனிதே நடந்தேறியது. போதகரின் மனைவி சுசி பால்மர் அவர்கள் ஆரம்ப ஜெபம் செய்ய, இளைஞர்களின் இசை மழையுடன் ஆரம்பமானது. கிறிஸ்துமஸ் மற்றும் இறைவனை மகிமைப்படுத்தும் பாடல்களைப் பாடி வந்திருதோரைப் பரவசமூட்டினர். சகோதரிகள் சலோமி மற்றும் ஜான்ஸி இதைப் பொறுப்பேற்று நடத்தினர். பின்பு சிறுவர்கள் அருமையாக வேதவசனங்களை மனப்பாடமாகச் சொல்லி இயேசு பிறப்பை அறிவித்தார்கள். தொடர்ந்து போதகர் பால்மர் அவர்கள் "குழந்தைகள் இறைவனுடைய பரிசு" என்று தேவச் செய்தி அறிவித்தார்கள். அதைதொடர்ந்து சிறுவர்கள் கிறிஸ்து பிறப்பை நடித்துக் காண்பித்தார்கள். அவர்களுடைய நாடகத்தை சகோதரி ஜோனி அருமையாக இயக்கியிருந்தார்கள். கடைசியில் கிறிஸ்துமஸ் தாத்தா அவர்களுக்குப் பரிசு வழங்கினார். வந்த அனைவருக்கும் சகோதரர் வசந்த் பிச்சுமணி நன்றி நவில விழா விருந்துடன் இனிதே நிறைவேறியது.

போதகர் பால்மர் பரமதாஸ்

© TamilOnline.com