மலிபு கோவிலில் தியாகராஜ ஆராதனை
ஜனவரி 23, 2010 சனிக்கிழமை அன்று, லாஸ் ஏஞ்சலஸ் மலிபு கோவிலில், காலை 10 மணி முதல் மாலை 7 மணிவரை தியாகராஜ ஆராதனை மற்றும் இதர வாக்கேயகாரர்களின் 6வது வருடாந்திர இசைத்திருவிழா கொண்டாடப்படும்.

விழாவில் கலிஃபோர்னியா வட்டார இசை ஆசிரியப் பெருமக்கள் தங்கள் சீடர் குழுவுடன் இணைந்து தியாகராஜரின் பஞ்சரத்ன கிருதியுடன் விழாவைத் தொடங்கி பல்வேறு வாக்கேயகாரர் பாடல்களையும் பாடுவார்கள். வழக்கம்போல இந்நிகழ்ச்சியை கானசரஸ்வதி (கானம்) மற்றும் தொண்டர்கள் அருண், கிருஷ்ணா, சர்வேஷ், சங்கீதா ஆகியோர் முன்னின்று நடத்துவர்.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com