தஞ்சை மண்ணிலிருந்து களவாணி
மதுரை, நெல்லை, கோவை, சென்னை என்று எல்லா வட்டார மொழிகளும் திரைப்படங்களில் வந்துவிட்டன. தஞ்சைத் தமிழைப் பதிவு செய்ய வருகிறது 'களவாணி'. "இது ஒரு விறுவிறுப்பான திரைப்படம். பக்கத்து ஊருக்குப் படிக்க வரும் பெண்ணின் மனதைக் களவாடுவதுதான் களவாணி. தஞ்சைப் பகுதி கிராமங்களுக்கு என்று ஒரு மொழி இருக்கிறது. இதுவரைக்கும் எந்த தமிழ் சினிமாவிலும் அது பதிவானதில்லை. அந்தக் குறை இந்தத் திரைப்படத்தின் மூலம் தீரும்” என்கிறார் இயக்குநர் சற்குணம்.

அரவிந்த்

© TamilOnline.com