ஜனவரி 2010: ஜோக்ஸ்
அம்மா: டேய், சிவா! பாட்டியைக் கொஞ்சம் கூப்பிடு.

சிவா: பாட்டி கொஞ்சம் இங்க வா!

அம்மா: முட்டாள். பெரியவங்களை எப்பவுமே மரியாதையாக் கூப்பிடணும்.

சிவா: சரிம்மா. (உரக்க) பாட்டி, மரியாதையா இங்க வா....

தெனாலி

*****


ராஜேஷ்: ஏண்டா தலைக்கடியில டிக்‌ஷனரியை வச்சிக்கிட்டு தூங்கற?

கேசவ்: எப்பப் பார்த்தாலும் தூக்கத்துல ஒரே அர்த்தமில்லாத கனவா வருது. அதான்...

தெனாலி

*****


சங்கீத ஜோக்ஸ்

சபா செக்ரடரி: ரசிகப் பெருமக்களுக்கு ஓர் அறிவிப்பு. உங்கள் வசதியைக் கருதி இன்று தனி ஆவர்த்தனம் சபா கேண்டீனிலேயே நடைபெறும். நன்றி.

நூரணி சிவம்,
டிராய், மிச்சிகன்

*****


பாடறது யாரு?

மங்களம் பாடறாங்க...

அதுக்குள்ளயா? இப்பதான் கச்சேரி தொடங்கிச்சு...!

இல்லை சார், பாடறவங்க பேரு மங்களம்னு சொன்னேன்.

நூரணி சிவம்,
டிராய், மிச்சிகன்

*****


அவர் என்ன பாடறார், வெறும் புஸ்புஸ்னு காத்துதான் வருது!

'காற்றினிலே வரும் கீதம்'.

நூரணி சிவம்,
டிராய், மிச்சிகன்

*****


ஏன் சார் கல்யாணியை இப்படிக் கொல்றாரு?

அதுவா, அவர் ஒய்ஃப் பேரும் கல்யாணியாம், அதான்.

நூரணி சிவம்,
டிராய், மிச்சிகன்

© TamilOnline.com