கனெக்டிகட் சத்யநாராயணர் ஆலயத்தில் கச்சேரி
நவம்பர் 15, 2009 அன்று செல்வியர் அபிநயா நிரஞ்சன், ப்ரீதிகா சேஷாத்ரி ஆகியோர் மிடில்டௌன் சத்யநாராயணர் கோவில் வளாகத்தில் குறுங்கச்சேரி ஒன்றை நிகழ்த்தினர். இவர்கள் குரு கலா பிரசாத் அவர்களின் மாணவியர் ஆவர். நல்ல பக்தி, பாவம் ஆகியவற்றோடு இருவரும் ஒருங்கியைந்து பாடியது கேட்கத் தெவிட்டாததாக இருந்தது. ராம் வெங்கட்ராமன் மிருதங்கம் வாசித்தார். கச்சேரிக்கு முன்னர் டாக்டர் பானர்ஜியின் சிஷ்யர்கள் தப்லா வாத்தியத்தில் சில சங்கதிகளை வாசித்துக் காட்டியது சுவையாக இருந்தது. இளையோரின் நிகழ்ச்சிக்கு இத்தனை பேர் திரளாக வந்திருந்தது இந்தியாவிலும் காண முடியாத ஆச்சரியம்.

கமலா ராமஸ்வாமி,
கனெக்டிகட்.

© TamilOnline.com