குண்டு கல்யாணத்தின் குழந்தைகள் படம்
800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருப்பவர் குண்டு கல்யாணம். தற்போது அவர் குழந்தைகளை மையமாக வைத்துப் புதிய படம் ஒன்றை இயக்க இருக்கிறார். 'நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி' என்று பெயரிடப்பட்டிருக்கும் இப்படம் முழுவதும் காடுகளில்தான் படம் பிடிக்கப்பட இருக்கிறது. காட்டுக்குள் சுற்றுலா போகும் குழந்தைகள் வெளியே வரமுடியாமல் சந்திக்கும் களேபரங்கள்தான் கதை. குழந்தைகளின் ரசனைக்காக யானை, கரடி உள்ளிட்ட பல மிருகங்களையும் நடிக்க வைக்க இருக்கின்றனர். குண்டு கல்யாணத்தின் மகள் ஜனனி முக்கியப் பாத்திரத்தில் நடிக்கிறார். டி.வி.யில் லொள்ளு சபா புகழ் மனோகர் வில்லனாக நடிக்கிறார். தேவதாரு பிலிம்ஸ் தியேடர்ஸ் சார்பில் ரிஷி ராஜ் இப்படத்தைத் தயாரிக்கிறார். நல்லதம்பி இசையமைக்கிறார். ஒளிப்பதிவு-விஜயன். ஒரு முக்கியமான பாத்திரத்தில் குண்டு கல்யாணமும் நடிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com