தெரியுமா?: ஒட்டாவா உடலழகன் போட்டியில் பகீரதன் விவேகானந் தேர்வு
நவம்பர் 7, 2009 சனிக்கிழமை அன்று கிழக்கு ஒன்ராறியோ மாகாணத்தின் ஒட்டாவா நகரத்தில் நடைபெற்ற உடலழகன் போட்டியில் (2009) முன்னெப்பொழுதும் இல்லாத அதிசயமாக ஓர் இலங்கைத் தமிழர் கலந்துகொண்டார். புலம்பெயர்ந்து பல இன்னல்களுக்கும் சவால்களுக்குமிடையில் வாழும் ஒருவருக்கு இப்படியான போட்டிகளில் பங்கு பெறுவதற்கு போதிய நேரமோ, ஆர்வமோ, வாய்ப்போ இருப்பதில்லை. ஆனால் பகீரதன் விவேகானந் என்னும் ஈழத்தமிழர் போட்டியில் பங்குபற்றியதும் அல்லாமல் இரண்டாவது இடத்தைப் பிடித்தது சபையினருக்கு வியப்பை அளித்தது. பகீரதனுடைய பகீரதப் பிரயத்தனம் அவர் பெற்ற வெற்றிக் கோப்பையில் நிதர்சனமாகத் தெரிகிறது.

அ.முத்துலிங்கம்,
ரொறொன்ரோ, கனடா

© TamilOnline.com