மிச்சிகன் தமிழ்ச் சங்கம்: திருக்குறள் போட்டி
ஏப்ரல் 9, 2006 அன்று மிச்சிகன் தமிழ்ச் சங்கம் சிறாருக்கான திருக்குறள் போட்டி நடத்தியது. இதில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமியர் கலந்து கொண்டனர்.

மூன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளிடம் இருந்து ஒரு குறளையே எதிர்பார்த்த போதும், சிலர் இரண்டுக்கு மேற்பட்ட பாக்களைச் சொல்லி அசத்தினர். மேல்நிலை மாணாக்கர் குறட்பாக்களோடு அவற்றின் பொருளையும் நற்றமிழில் சொன்ன விதம் வெகு அழகு.

முதிர்நிலைச் சிறாருக்குத் தமிழில் எழுதிக் காட்டும் போட்டியும் இருந்தது. அதிலும் அவர்கள் ஆர்வத்தோடு பங்குகொண்டனர். தமது குழந்தைகள் இப்போட்டிகளில் நன்றாகச் செய்யவேண்டும் என்பதற்காகப் பெற்றோர்கள் மிகுந்த உழைப்பைத் தந்திருந்தனர்.

வெற்றிபெற்ற குழந்தைகளுக்குத் தமிழ்ப் புத்தாண்டு தினத்தன்று பரிசுகள் வழங்கப் பட்டன.

கங்கா

© TamilOnline.com