தெரியுமா?: பேரா. ஜார்ஜ் ஹார்ட்டுக்கு குறள்பீட விருது
பெர்க்கலியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் தமிழ்ப் பீடத்தை நிர்வகிக்கும் முனைவர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களுக்கு குடியரசுத் தலைவரின் செம்மொழி தமிழ் விருதுகளில் ஒன்றான குறள்பீடம் விருது (2006-07) வழங்கப்பட்டுள்ளது. இது தமிழ் மொழிக்குச் சிறப்பாகப் பணியாற்றும் வெளிநாட்டவர் அல்லது வெளிநாடுவாழ் தமிழருக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுவதாகும். தமிழைச் செம்மொழியாக அறிவிக்க வேண்டுமென்று இந்தியக் குடியரசுத் தலைவருக்கு இவர் 2000த்தில் எழுதிய கடிதத்தில் "சம்ஸ்கிருதம், கிரேக்கம், லத்தீன், சீனம், பாரசீகம், அரபி ஆகிய மொழிகளின் மகத்தான இலக்கியங்களுக்கு இணையாக நிற்பது தமிழ் செவ்விலக்கியம்" என்று குறிப்பிட்டுள்ளார்.

முனைவர் ஜார்ஜ் ஹார்ட் அவர்களுடனான விரிவான நேர்காணல் தென்றல், மார்ச் 2002 இதழில் வெளியாயிற்று. அதை www.tamilonline.com/thendral வலைமனையில் வாசிக்கலாம்.

© TamilOnline.com