கான்கார்டு ஹிந்து ஆலயத்தில் உமையாள் முத்து சொற்பொழிவு
ஜூலை 18, 2009 அன்று கான்கார்டு முருகன் கோவிலில் 'அறுபடை வீட்டு அழகன்' என்ற தலைப்பில் திருமதி உமையாள் முத்து அவர்களின் சொற்பொழிவு நடைபெற்றது. ஒன்றரை மணிநேரம் நடந்த அந்தச் சொற்பொழிவில் முருகனின் அவதாரம், திருச்செந்தூர் வரலாறு, முருக பக்தர்களுக்கு குமரன் அருள்பாலிக்கும் விதம், வழிபாட்டு முறைகள், அலங்காரம், தெய்வ மணி மாலையிலிருந்து பல பாடல்கள் என்று அருவியெனக் கொட்டிய அந்தச் சொற்பொழிவு, மெய்யன்பர்களுக்குச் சொல்விருந்தாக அமைந்திருந்தது. திருமதி கௌசல்யா ஜார்ஜ் ஹார்ட் அவர்கள் நன்றியுரையில் இச்சொற்பொழிவுக் கருத்துக்கள் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டு எழுத்து வடிவம் பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மீனா உடையப்பன், ஃப்ரீமாண்ட், கலிபோர்னியா

© TamilOnline.com