திகில்படம் 'பவுர்ணமி நாகம்'
'யார்' என்ற திகில் படத்தை எடுத்துப் பெயர் பெற்றவர் 'யார்' கண்ணன். தற்போது அவர் எடுத்துவரும் திகில் படம் 'பவுர்ணமி நாகம்'. சந்திர, சூ‌ரிய கிரகணங்களின் போது நடத்தப்படும் நாக பூஜையைக் களமாக வைத்துப் படத்தை உருவாக்கியிருக்கும் கண்ணன், இதில் பெரும் பொருட் செலவில் கிராஃபிக்ஸ் உத்திகளைப் பயன்படுத்தியிருக்கிறார். முமைத்கான் ஹீரோயினாக நடிக்கிறார். அவருடன் கருணாஸ், நளினி, நிழல்கள் ரவி ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். சவுண்ட் அண்ட் கிளாப்ஸ் நிறுவனம் சார்பில் விஜயகுமார் தயா‌ரிக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஏ. ரா‌ஜ்குமார் இசையமைக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com