கழுதையின் வார்த்தை!
ஒருநாள் முல்லாவின் பக்கத்து வீட்டுக்காரர், முல்லாவை அழைத்து, "உங்கள் கழுதையை இரவல் தர முடியுமா?" என்று கேட்டார். அதற்கு முல்லா, "மன்னிக்கவும். ஏற்கெனவே கழுதையை நான் வாடகைக்கு வேறு ஒருவரிடம் தந்து விட்டேன்" என்றார். இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது முல்லாவின் பின் தொழுவத்திலிருந்து கழுதையின் கனைப்பு கேட்டது. உடனே பக்கத்து வீட்டுக்காரர் முல்லாவிடம், "பின்னால் கழுதை சத்தமிடுவது கேட்கிறதே" என்றார் சந்தேகத்துடன். உடனே முல்லா கோபத்துடன், "என் வார்த்தையை விட, கேவலம் ஒரு கழுதையின் வார்த்தை உங்களுக்கு முக்கியமாய்ப் போய்விட்டது இல்லையா? உங்களுக்கு வெட்கமாக இல்லை?" என்றார். பக்கத்து வீட்டுக்காரர் பதில் பேச முடியாமல் திரும்பினார்.



© TamilOnline.com