நாடியோர்க்கும் நாடார்க்கும்...
கலைஞர் மு. கருணாநிதி முதன்முறை முதலமைச்சராகப் பதவியேற்றிருந்த நேரம்.

அப்போது எதிர்க்கட்சித் தலைவர் பி.ஜி. கருத்திருமன், "நீங்கள் நாடார் சமூகத்தினருக்கு உதவி செய்வதில்லை என்கிற குற்றச்சாட்டுக்கு என்ன பதில் சொல்கிறீர்கள்?" என்று கேட்டார்.

இக்கட்டான இந்தக் கேள்விக்குக் கலைஞர் சொன்ன பதில் கருத்திருமன் உட்பட எல்லாரையும் சிரிக்க வைத்தது.

"என்னை நாடியோர்க்கு எல்லா உதவியும் செய்வேன் என்று நான் சொன்னேன். அதற்கு அர்த்தம் நாடார்க்குச் செய்ய மாட்டேன் என்பதல்ல".



© TamilOnline.com