மாசம்பத்து!
ரசிகமணி என்று போற்றப்பட்டவர் டி.கே.சிதம்பரநாத முதலியார். ஒருமுறை இலக்கியப் பத்திரிக்கை ஒன்றில் அவரை மாதம் ஒரு கட்டுரை எழுதித் தரும்படியும், அதற்குச் சன்மானமாக மாதம் பத்து ரூபாய் தருவதாகவும், அதை அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் வேண்டிக் கொண்டனர்.

"உங்களுக்கு மாதம் பத்து ரூபாய் என்பதில் சம்மதம்தானே?" என்று அவர்கள் கேட்டதற்கு, டி.கே.சி. அவர்கள், "உங்கள் பத்திரிக்கையின் தரம் மிகவும் உயர்ந்தது. நீங்கள் தரும் மாசம் பத்து எனக்கு மா சம்பத்து" என்றார் புன்னகையுடன்.



© TamilOnline.com