கி.வா.ஜ.வும் பூரியும்
நண்பர்களுடன் ஒரு விருந்துக்குப் போனார் கி.வா.ஜ. அவர் ஆசார சீலர் என்பதால் விருந்துக்கு அழைத்தவர்களுள் ஒருவர் சற்றுத் தயங்கியபடியே கி.வா.ஜவிடம், "உங்களுக்குப் பூரி பிடிக்குமா?" என்று கேட்டார்.

"ஜகன்னாதனுக்குப் பூரி பிடிக்காமல் இருக்குமா?" என்று உடன் பதிலளித்தார் கி.வா.ஜ. பூரி ஜகந்நாதரை சிலேடையாக வைத்து அவர் பதில் கூறிய விதத்தைப் பார்த்து நண்பர்கள் வியந்தனர்.



© TamilOnline.com