மீண்டும் மகாத்மா
மகாத்மா காந்தி இன்றைய சூழ்நிலையில் இந்தியாவுக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை மையமாக வைத்து 'முதல்வர் மகாத்மா' என்ற பெயரில் புதிய படம் ஒன்று தயாராகி வருகிறது. ஒரு பின்தங்கிய இந்திய கிராமத்துக்கு காந்தி வருகிறார். அராஜகம், ஊழல் உள்ளிட்ட சமூகச் சீர்கேடுகள் நிறைந்த இந்தக் காலகட்டத்தில் அகிம்சையையும் சத்தியாகிரகத்தையும் பயன்படுத்தி நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுசெல்ல முயற்சிக்கிறார். அவருடைய முயற்சி வெற்றி பெற்றதா இல்லையா என்பதைச் சொல்கிறது ‘முதல்வர் மகாத்மா'. ‘காமராஜ்' படத்தை இயக்கிய அ. பாலகிருஷ்ணன் இயக்குகிறார். தமிழிலும் ஆங்கிலத்திலும் சர்வதேசத் தரத்தில் உருவாக்கப்படும் இந்தப் படத்தில் காந்தியாக எஸ். கனகராஜ் நடிக்கிறார்.

அரவிந்த்

© TamilOnline.com