இளமனதை வடிவமைக்க: சிறாருக்கான தொழிற்பட்டறை
2009 ஜூலை 19 மற்றும் 26 தேதிகளில், சுவாமி சுகபோதானந்தா அவர்கள் உருவாக்கியுள்ள, 9 முதல் 12 வயது சிறாரின் மனதை வடிவமைப்பதற்கான தொழிற்பட்டறை ஒன்று நடக்கவிருக்கிறது. தன்னம்பிக்கை, மொழித்திறன், படைப்பாற்றல், உடல் உணர்வுகள் பற்றிய அறிவு (body and emotional intelligence), மேடைப் பேச்சு, உரையாடுதல், உறவை வளர்த்தல் போன்ற கலைகளில் ஊக்கம் கொடுத்து அவர்களை வெற்றியாளர்களாகக் கொண்டு வருவதில் இந்தப் பயிற்சி கவனம் செலுத்துகிறது.

சிறிய வயதினரின் கவனத்தைக் கவரும்வண்ணம் இந்த வகுப்பறை ஒரு விளையாட்டுக் கூடம் போன்றே நடத்தப்படுகிறது. பல சுவையான விளயாட்டுக்கள், தியானம் போன்றவை மூலம் நமது இந்திய கலாசாரத்துடன் ஆன்மீகப் பயிற்சியை வழங்குகிறது. வாழ்க்கையை முழுமையான பயணமாக, நகைச்சுவை உணர்வோடு இனிமையாக அனுபவிக்கத் தயார் படுத்துகிறது.

நாள்: ஜூலை19, 26 தேதிகள்
நேரம்: மாலை 3:45 to 7:00 (2 பாகங்கள்)
இடம்: கோமளவிலாஸ்
மேலும் விபரங்களுக்கு:
ஷகிலா - 408-425-2851 - toshakila@gmail.com
கமலா - 408-205-7035 - vskamala@yahoo.com
இணையதளம்: www.swamisukhabodhananda.org

N. ஷகிலா பானு

© TamilOnline.com