தமிழ்த் தாய்க்கு ஒரு கோவில்
கம்பனடிப்பொடி சா. கணேசன் அவர்களது முயற்சியால், பிரபல சிற்பி கணபதி ஸ்தபதி (பார்க்க: தென்றல், மார்ச் 2009 இதழ்) அவர்களைக் கொண்டு தமிழ்த்தாய்க்கென்று ஒரு கோயில் காரைக்குடியில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டது. இப்போது திண்டுக்கல் பகுதியில் மற்றொரு கோயில் அமைக்கப்பட உள்ளது. ஒரு கோடி ரூபாய் பொருட்செலவில் இந்த ஆலயம் அமைக்கப்பட உள்ளதாகவும், ‘அ' முதல் ‘ஔ' வரையிலான எழுத்துக்களைக் கொண்டு தமிழிலேயே வழிபாடு செய்ய இருப்பதாகவும் ஆலய அமைப்பினர் தெரிவிக்கின்றனர். இங்கே சிறார்க்குத் தமிழ் பயிற்றவும், இலக்கண, இலக்கியப் பயிற்சிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறிய அவர்கள், தமிழ் மொழியை வளர்ப்பதே தங்கள் நோக்கம் என்கிறார்கள்.

அரவிந்த்

© TamilOnline.com