தைரியமிருந்தால் ‘தொட்டுப்பார்'
தோல்பாவை தியேட்டர்ஸ் சார்பில் ஜானகி சிவக்குமார் தயாரிக்கும் புதிய படம் 'தொட்டுப்பார்'. இதில் கூத்துப் பட்டறை வித்யார்த் கதாநாயகனாக அறிமுகமாகிறார். பெங்களூரைச் சேர்ந்த லட்சணா கதாநாயகி. அழகம்பெருமாள், வி.எம்.சி. ஹனீபா, சிங்கமுத்து, கஞ்சா கருப்பு, மயில்சாமி ஆகியோர் இணைந்து நடிக்கின்றனர். வில்லனாக நடிகர் ரமணா. மும்பையைச் சேர்ந்த தினேஷ் லம்பா இதில் நடிக்கின்றார். இசை: ஸ்ரீகாந்த் தேவா; கதை, திரைக்கதை, வசனம், இயக்கம்: நந்து. “ஒரு சந்தர்ப்பத்தில் ‘தைரியம் இருந்தால் தொட்டுப்பார்' என்கிறார் கதாநாயகன். அது ஏன், முடிவு என்ன என்பதுதான் படம்” என்கிறார் இயக்குநர் நந்து. இவர் பேரரசு, பிரியதர்ஷன், மலையாள இயக்குனர் கமல் ஆகியோருடன் இணைந்து பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரவிந்த்

© TamilOnline.com