சூர்யாவின் 25வது படம் ‘சிங்கம்'
'காக்க காக்க' படத்துக்குப் பிறகு சூர்யா மீண்டும் போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம் ‘சிங்கம்'. தேவிஸ்ரீபிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் ஹரி. ஒளிப்பதிவு: ப்ரியன்; எடிட்டிங்: வி.டி.விஜயன். 'சில்லுனு ஒரு காதல்', ‘பருத்திவீரன்' ஆகிய வெற்றிப் படங்களைத் தயாரித்த கே.ஈ. ஞானவேல் ராஜாவின் ‘ஸ்டுடியோ க்ரீன்', பிக் பிக்சர்சுடன் இணைந்து இப்படத்தைத் தயாரிக்கிறது. 'சாமி'க்குப் பிறகு மறுபடியும் ஒரு பரபரப்பான போலீஸ் அதிகாரியின் கதை 'சிங்கம்' என்கிறார் ஹரி. கே.எஸ். ரவிகுமார் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘ஆதவன்' திரைப்படத்தைத் தொடர்ந்து இப்படம் வெளியாக இருக்கிறது. சூர்யாவுக்கு இது 25-வது படம்.

அரவிந்த்

© TamilOnline.com