இயற்கை ஆர்வலர்
தமிழகத்தின் சிறு கிராமமான வெட்டுவான் புதூரைச் சேர்ந்தவர் 76 வயதாகும் அய்யாச்சாமி. மரம் நடுவதும், அவற்றைப் பேணுவதும் இவருக்கு முக்கியப் பணி. 25 ஆண்டுகளில் 10000க்கும் மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டிருக்கும் இவர், அவற்றை பாசத்துடன் தன் 'குழந்தைகள்' என்று குறிப்பிடுகிறார். ‘மனிதர்கள் தங்கள் சுயநலத்திற்காகவும், வியாபார நோக்கங்களுக்காகவும் மரங்களை வெட்டுவது மிகவும் வேதனைக்குரியது. இந்தச் செயல்களுக்கு எதிராக வருவாய் மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் பயன் ஏதும் இல்லை' என்கிறார் சோகத்துடன். மனிதர்களை நேசிப்பவர்களே அருகிக் கொண்டு வரும் சமுதாயத்தில் மரங்களையும் நேசிப்பவர் உண்மையிலேயே 'பெரியவர்'தான்.

அரவிந்த்

© TamilOnline.com