அர்ஜூனின் இரண்டு படங்கள்
தற்போது நடித்து வரும் 'அறுவடை' படத்தைத் தொடர்ந்து 'கள்ளன்' என்ற படத்தில நடிக்க இருக்கிறார் அர்ஜூன். சுந்தர்.சி நடித்த வெற்றிப்படமான 'தீ'யின் இயக்குநர் ஜி. கிச்சா கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார். இதில் அர்ஜுன் போலீஸ் அதிகாரி. என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்டாக நடிக்கும் அவர் இதற்காக காவல்துறை அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார். இது ஒரு அதிரடி ஆக்?ஷன் படம் என்பது குறிப்பிடத்தக்கது. அன்புலட்சுமி பிலிம்ஸ் சார்பில் கோவை மணி இப்படத்தைத் தயாரிக்கிறார். இசை: டி.இமான்; பாடல்கள்: பிறைசூடன், யுகபாரதி, முருகன்.

இப்படத்தைத் தொடர்ந்து 'அதே கண்கள்' என்ற படத்திலும் அர்ஜூன் நடிக்க இருக்கிறார். சாமியின் இயக்கத்தில் 'சரித்திரம்' படத்தைத் தயாரித்து வரும் ஐ.டி.ஏ. பிலிம்ஸ் எஸ்.என்.ராஜா, இதைத் தயாரிக்கிறார். அர்ஜுனுக்கு ஜோடியாக இந்தி நடிகை பஞ்சனா சிங் அறிமுகமாகிறார். இசை: சுந்தர்.சி பாபு; ஒளிப்பதிவு: டி.கண்ணன். படத்தை பிரபல இயக்குநர் மேஜர் ரவி இயக்குகிறார். 'சஸ்பென்ஸ் த்ரில்லராக இப்படம் இருக்கும்' என்கிறார் படத்தின் இயக்குநர் ரவி.

தொகுப்பு: அரவிந்த்

© TamilOnline.com