நீல. பத்மநாபனின் மகிழ்ச்சி
பிரபல எழுத்தாளரும் சாகித்ய அகாதமி விருது பெற்றவருமான நீல. பத்மநாபன், தமிழிலக்கியத்தின் குறிப்பிடத்தகுந்த சாதனையாளர்களுள் ஒருவர். பள்ளிகொண்டபுரம், தலைமுறைகள் போன்ற அவரது படைப்புகள் தனிச்சிறப்பு பெற்றவை. அவரது குறிப்பிடத் தகுந்த நாவல்களுள் ஒன்றான ‘தலைமுறைகள்', 'மகிழ்ச்சி' என்ற பெயரில் திரைப்படமாக வெளிவர உள்ளது. 'கனவே கலையாதே' படத்தை இயக்கியவரும் வீரப்பனின் வாழ்க்கை வரலாற்றைத் தொலைக்காட்சித் தொடராகத் தயாரித்தவருமான கவுதமன் இப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாகவும் அவரே நடிக்கிறார். தயாரிப்பு: சிவசக்தி பாண்டியன். இசை: தேவா.

அரவிந்த்

© TamilOnline.com