நியூஜெர்சி தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
ஜனவரி 24, 2009 அன்று நியூஜெர்சி தமிழ்ச்சங்கம் பாலாஜி கோவில் அரங்கத்தில் பொங்கல் விழாவைக் கொண்டாடியது. சங்கத் தலைவி ரேணுகா குமாரசாமி அனைவரையும் வரவேற்றார். விழாவில் குழந்தைகளுக்கான ஓவியப் போட்டியும், குழந்தைகள் கலைநிகழ்ச்சிகளும் இடம் பெற்றன. வடகிழக்கு மாநிலங்களில் நிலவும் கடும்குளிரையும் பொருட்படுத்தாமல் அரங்கம் நிறைந்து வழிந்தது.

ஓவியப் போட்டியில் பங்குபெற்று வெற்றி கண்ட குழந்தைகளுக்கு கோப்பைகளையும், சான்றிதழ்களையும் சங்கத்தின் முன்னாள் தலைவர் திருமதி இராவணன், திருமதி ஜீவா ஆகியோர் வழங்கினர். விழாவின் இறுதியில் சங்கத் துணைத்தலைவர் கல்யாணசுந்திரம் நன்றியுரை வழங்கினார்.

ப. முத்து தங்கம்

© TamilOnline.com