ஸ்ருதிலயா (அட்லாண்டா) கர்நாடக இசைப் போட்டிகள்
ஜனவரி 17-18, 2009 ஆகிய இரண்டு நாட்களில்அட்லாண்டா பெருநகரிலுள்ள ஸ்ருதிலயா அமைப்பு கர்நாடகக் குரலிசை மற்றும் கருவியிசைகளில் போட்டிகளை அட்லாண்டா இந்துத் திருக்கோவிலில் நடத்தியது. இத்தகைய போட்டிகளை நடத்துவது இது நான்காவது ஆண்டாகும்.

ஏறத்தாழ 70 குழந்தைகள் பங்கேற்ற இந்தப் போட்டிக்கு நிர்மலா ராஜசேகர் (மின்னியா பொலீஸ்), டாக்டர். கே.வி. வெங்கடாசலம் (ஃப்ளோரிடா), டாக்டர் ராம் ஸ்ரீராம், டாக்டர் சேஷு சர்மா (இருவரும் அட்லாண்டா) ஆகியோர் நடுவர்களாக இருந்தனர்.

கலா வாசு, அட்லாண்டா

© TamilOnline.com