நரேன் நடிக்கும் 'பூக்கடை ரவி'
'அஞ்சாதே' படத்திற்குப் பிறகு நரேனுக்கு பெயர் சொல்லும்படியாகப் படங்கள் ஏதும் அமையவில்லை. இந்நிலையில் செல்வராகவனின் உதவியாளர் சிவகுமார் இயக்கும் 'பூக்கடை ரவி' படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் நரேன். மதுரையை மையமாகக் கொண்டு எழுதப்பட்டிருக்கும் இப்படத்தில் நரேனுக்கு ஆக்‌ஷன் கலந்த வித்தியாசமான வேடம். மாஸ்கோவின் காவிரி' படத்தில் நடித்து வரும் புதுமுகம் சமந்தா கதாநாயகியாக நடிக்கிறார். பூ விற்கும் ஒருவன் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள்தான் கதை என்கிறார் இயக்குநர் சிவகுமார்.

அரவிந்த்

© TamilOnline.com