SIFA தியாகராஜ ஆராதனை
பிப்ரவரி 18, 2007 அன்று தென்னிந்திய நுண்கலைகள் (SIFA) அமைப்பு தியாகராஜ விழாவை நடத்தியது. சான் ஹோசேவிலுள்ள ஹிஸ்டாரிக் ஹ¥வர் அரங்கில் இவ்விழா நடந்தது.

காலை 8:15 மணிக்குத் திருமதி ஆஷா ரமேஷ் அவர்களின் தலைமையில் சுமார் 20 பேர் மேடையில் அமர்ந்து பஞ்சரத்னக் கீர்த்தனைகளைப் பாடி நிகழ்ச்சியைத் தொடங்கினர். அடுத்தடுத்து வளைகுடாப் பகுதியின் பல சங்கீதப் பள்ளிகளில் இருந்தும் வந்த மாணவர்கள் தொடர்ந்து இரவுவரை குரலிசை, வயலின், வீணை, புல்லாங்குழல் என்று பல வகையில் இசைத்த வண்ணம் இருந்தனர். இதில் சுமார் 130 மாணவ மாணவியர் கலந்துகொண்டனர். இந்த எண்ணிக்கை சென்ற ஆண்டைவிட அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. அப்படி இருந்தும் நேரம் போதவில்லை என்பதால் மார்ச் 4 தேதி எஞ்சியவர்கள் பாட உள்ளனர்.

'வளைகுடாவில் திருவையாறு' என்று சொல்லும்படி அவ்வளவு சிறப்பாக ஆராதனை அமைந்திருந்தது.

சீதா துரைராஜ்

© TamilOnline.com