சாண்டியேகோ தமிழ் சங்கம் மெல்லிசை மழை
நவம்பர் 1, 2008 அன்று சாண்டியேகோ தமிழ்ச் சங்கம் 'மெல்லிசை மழை' ஒன்றை தீபாவளிப் பண்டிகையை ஒட்டி ஏற்பாடு செய்திருந்தது. 4S ரான்ச்சில் உள்ள ஸ்டோன் ரான்ச் பள்ளி அரங்கத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் லாஸ் ஏஞ்சலஸின் 'ஆஷியானா' குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சியுடன் சாண்டியேகோ கலைஞர்கள் சிலரும் பங்கு பெற்றனர். ஆஷியானாவின் உத்தரா ராம் மற்றும் ஸ்ரீராம் ஸ்ரீனிவாசனின் குரல்வளத்திற்கு கீபோர்ட் ராஜ் மற்றும் பெர்க்குஷன் மஹேஷ் மிஷ்ரா மெருகேற்றினார்கள். ஸ்ரீராமின் குரலில் 'இளமை இதோ இதோ' பாடல் SPBயை நேரில் அழைத்து வந்ததென்றால், உத்தரா 'ரா ரா' என்று சந்திரமுகியாகவே மாறிவிட்டார்.

இடைவேளைக்குப் பிறகு சாண்டியேகோவின் ரவி ராஜாராமன், சுவாமிநாதன் கணேசன், வீணா பத்மநாபன், ஸ்ரீப்ரியா சந்துரு, அஷ்வின் ராம் ஆகியோர் 'வீரபாண்டிக் கோட்டை', 'வசீகரா', 'பூவே செம்பூவே' ஆகியவற்றை வழங்கினர். அடுத்துப் பாய்ந்தது 'அமெரிகன் ஐடல்' புகழ் ஸ்ரீராம் ரங்கராஜனின் காதல் நதி. இடைவேளைக்குப் பிறகு மீண்டும் 'ஆஷியானா' குழுவினர் ஒரு நீண்ட தொடர்பாடலுடன் நிகழ்ச்சியை முடித்தார்கள்.

டேலண்ட்ஃப்யூஸ், ராபின்ஸ்டார் நிறுவனங்கள் ஸ்பான்சர் செய்து வழங்கிய மெல்லிசை மழை நான்கு மணி நேரம் பொழிந்தது.

கார்த்தி சம்பத்

© TamilOnline.com