உள்ளத்தை உலுக்கும் ஆவணப்படம்
இரண்டு வருடங்களுக்கு முன்பு கும்பகோணம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற தீவிபத்தைக் கருவாக வைத்து 'என்று தணியும்..' என்றொரு ஆவணப்படத்தைத் தயாரித்து அளித்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.

'தி ரூட்ஸ்' நிறுவனத்தின் சார்பாக இதைத் தயாரித்து இயக்கியிருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார். படத்திற்கான இசையை இரா. பிரபாகர் அமைக்க, பாடலை இரா. தனிக்கொடி எழுதியிருக்கிறார். செல்வாவின் ஒளிப்பதிவில் உருவாகியுள்ளது 'என்று தணியும்..'

கேடிஸ்ரீ

© TamilOnline.com