மருதபரணி வசனத்தில் 'வர்றேண்டா மதுரைக்கு'
தமிழ்த் திரைப்படங்களுக்கு தெலுங்கில் அமோக வரவேற்பு கிடைத்து வருவதைத் தொடர்ந்து நிறைய தமிழ்ப் படங்கள் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. இந்நிலையில் தெலுங்குப் படம் ஒன்று தமிழில் 'வர்றேண்டா மதுரைக்கு' என்ற பெயரில் டப் செய்யப்பட்டுத் திரையிடத் தயாராகி வருகிறது.

'பீலா புரொடக்ஷன்ஸ்' படநிறுவனம் அளிக்கும் இப்படத்தை பி.என். திலக் தயாரித்து வழங்குகிறார். இசை மணிஷர்மா, பாடல்களை கலைகுமார் எழுதியுள்ளார்.

ஸ்ரேயா, கீர்த்திரெட்டி, சரிதா, பிரகாஷ்ராஜ், நாசர் ஆகியோர் நடிப்பில் உருவான இப்படம் தமிழில் மருதபரணி வசனத்தில் டப் செய்யப்பட்டுள்ளது. இயக்கம் குணசேகர்.

குணச்சித்திர பாத்திரத்தில் அதிகம் நடிக்கும் சரிதா, கொஞ்சம் வித்தியாசமாக இப்படத்தில் வில்லி பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவரது கணவராக வருகிறார் பிரகாஷ்ராஜ். இவர்களது மகளாக ஸ்ரேயா நடித்திருக்கிறார்.

கேடிஸ்ரீ

© TamilOnline.com