ஒரே ஆண்டில் 25 புதிய திரைப்படங்கள்!
நீண்ட அனுபவம் உள்ள தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சிறந்த இயக்குநர்களைக் கொண்டு, 200 கோடி ரூபாய் செலவில், இந்த ஒரே ஆண்டுக்குள் 25 புதிய படங்களை தயாரிக்கத் திட்டமிட்டுள்ளதாக பிரமிட் நடராஜன் அறிவித்துள்ளார். திரையுலகம் மேம்பட தயாரிப்புத் துறை, விநியோகஸ்தர்கள், படவெளியீடு என எல்லாப் பிரிவினருக்கும் பல சலுகைகளை வழங்கிய முதல்வர் கருணாநிதியை, இப்படங்களுக்கான தொடக்க விழாவில் அழைக்கவிருப்பதாகவும் கூறியுள்ளார்.

பிரமிட் சாய் மிரா தியேட்டர்கள் நிறுவனம் சார்பில் இப்படங்கள் தயாரிப்படவிருக்கின்றன. இந்நிறுவனத்தின் சார்பில் இந்தியாவில் மொத்தம் 250 திரையரங்குகள் நடத்தப்படுகின்றன. அதுபோல் மலேஷியாவில் சென்டிரியான் பெர்ஹாட் நிறுவனத்துடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com