கலாலயா எஸ்.பி.பி., சித்ரா இசைவிருந்து
செப்டம்பர் 14, 2008 அன்று 'பாடும் நிலா' எஸ்.பி. பாலசுப்ரமணியமும் 'சின்னக்குயில்' சித்ராவும் பங்கேற்ற திரையிசை விருந்து ஒன்றை கலாலயா ஏற்பாடு செய்திருந்தது. எஸ்பிபியின் சகோதரி ஷைலஜாவும் இதில் பாடினார்.

அறுபது வயதைத் தாண்டிய பின்னரும் தனது அமுதக் குரலால் எஸ்பிபி எல்லோரையும் கவர்ந்தார். எத்தனை சிரமமான பாட்டாக இருந்த போதிலும் சிரித்த முகத்துடன் பாடினார் சித்ரா. வளர்ந்துவரும் கலைஞர் ஸ்ரீகிருஷ்ணா 'காலங்களில் அவள் வசந்தம்' என்ற பி.பி. ஸ்ரீநிவாஸ் அவர்களின் காலத்தை வென்ற பாடலைப் பாடினார்.

எஸ்பிபி பாடிய 'நந்தா என் நிலா', சித்ரா பாடிய 'பாடறியேன்', 'ஒவ்வொரு பூக்களுமே' ஆகியவை சாகாவரம் பெற்றவை. இன்னும் பிற இளமை ததும்பும் பாடல்களையும் பாடினர்.

கல்பகம் கௌசிக்

© TamilOnline.com