ஓயட்டும் போர்கள்
அரசியல் சாணக்கியத்தை விட்டுவிட்டு
அன்பின் சாகித்தியத்தை போதியுங்கள்
உயிர் கொல்லும் அநாகரிகத்தை விட்டுவிட்டு
உயிரின் மகத்துவத்தைக் கற்றுக்கொடுங்கள்
போரில் தாயை இழந்த குழந்தை
புத்தனாகவா உருவாகப் போகிறது?
வெடிகுண்டினால் விதவையானவள்
வெகுளியாகவா வளர்க்கப் போகிறாள் தன் மகனை?
இந்த தலைமுறை தீவிரவாதிகளைக் கொன்று
இன்னொரு தீவிரவாதத் தலைமுறையை உருவாக்காதீர்!

சிவ. செந்தில் மணியன்

© TamilOnline.com