ராஜேஷ்குமாரின் அகராதி
1000 கிரைம்-த்ரில்லர் நாவல்களுக்கு மேல் எழுதி சாதனை படைத்தவர் எழுத்தாளர் ராஜேஷ்குமார். இரவில் ஒரு வானம் என்ற இவரது நாவல் 'அகராதி' என்ற பெயரில் திரைப்படமாகத் தயாராகிறது. இதில் பிரதீப் கதாநாயகனாக நடிக்கிறார். மோனிகா, அர்ச்சனா, சௌந்தர்யா, கிரண் ஆகியோர் கதாநாயகிகள். திரைக்கதை, இயக்கம் நாகா வெங்கடேஷ். ஒரு குடும்பத்தில் ஏற்படும் சிக்கல்களையும் ஆதனால் ஏற்படும் விபரீதங்களையும் சஸ்பென்ஸ் கலந்து சொல்கிறது இப்படம். தமிழ் சினிமாவின் ஹைடெக் த்ரில்லர் கதையாக இப்படத்தை உருவாக்கி வருகிறோம் என்கிறார் இயக்குநர். இசை: சுந்தர்.சி பாபு. பாடல்கள்: வாலி, தாமரை, கவிவர்மன். வசனம்: எம்.முருகன்.

அரவிந்த்

© TamilOnline.com