கலைஞரின் பொன்னர் சங்கர்
கலைஞர் மு.கருணாநிதி எழுதிய பிரபல சரித்திர நாவல் பொன்னர் சங்கர். இது விரைவில் திரைப்படமாகிறது. பொன்னராகவும், சங்கராகவும் இரு வேடங்களில் பிரசாந்த் நடிக்கிறார். இயக்கம், பிரசாந்தின் தந்தை தியாகராஜன். இரண்டு வேடத்திலும் பிரசாந்தே நடிக்கட்டும், அதுதான் சிறப்பாக இருக்கும் என்று சொல்லி ஊக்குவித்ததே கலைஞர்தானாம்.

'தமிழ்த் திரைப்பட வரலாற்றில் இத்தனை பொருட் செலவில் எடுக்கப்படும் முதல் சரித்திரப்படம் இதுவாகதான் இருக்க வேண்டும். ஆஸ்கார் விருதுக்கு ஆசைப்படுகிற தமிழன் அந்த ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாம். இந்தப் படத்தை ஆஸ்கார் விருதுக்கு அனுப்புவேன்' என்கிறார் தியாகராஜன். 'என் கல்லூரி நாட்களில் இந்தக் கதையை படித்துவிட்டு இதைப் படமாக்கி அதில் நடிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போதுதான் அது கனிந்திருக்கிறது. நான் ஆசைப்பட்டதை என் பிள்ளை செய்யப் போகிறார்' என்கிறார் தியாகராஜன். இதற்கும் இசை இளையராஜா.

அரவிந்த்

© TamilOnline.com