ஆகஸ்டு 2008: குறுக்கெழுத்துப் புதிர்
ஜூலை மாதப் புதிரில் 'கழுத்து வெண்ணிறமென்பதால் நீலக்கழுத்து வாசிக்கு ஆகாதோ?' என்ற குறிப்புக்கு "கண்டம்" என்ற விடையைச் சிலர் அளித்திருந்தனர். திருநீலகண்டர் என்று தோன்றியதால்தான் இது வந்துள்ளது என்பது புரிகிறது. ஆனால் நீலக்கழுத்துவாசியான பாம்புக்கு ஆகாத வெண்ணிறக் கழுத்தையுடையவன் என்று பொருள் கொண்டால் 'கருடன்' என்ற விடையின் பொருத்தம் வெளிப்படும்.

அப்புதிரில் "குறைவான தானியம் செயல் பெண்ணெடுப்பது" என்ற மற்றொரு குறிப்புக்கான விடை "கொள்வினை". "கொள்வினை, கொடுப்பினை" என்பது கிராமங்களில் திருமண சம்பந்தத்தைக் குறிக்க பேச்சில் பரவலாக வழங்கப்படுவது.

சென்னையில் புதிர் ஆர்வலர்கள் சந்திப்பு. திட்டமிடவும் விவரங்களை அறியவும் மின்னஞ்சல் மூலம் தொடர்பு கொள்ளவும்: vanchinathan@gmail.com

குறுக்காக
3. மதகுருவிடம் வெள்ளத்தை அடக்குந்திறனுண்டு (3)
5. விரியா மட்டை மீண்டுவந்த ஞாயிற்றுக்கு முன் வலம் வரும் (5)
6. 7இல் இருப்பதை இப்படியாகப் பயன்படுத்த முடியாது (2)
7. தன்னுடையே தான் என்றிருக்கும் நெல் (3)
8. தெளிவாக்கத் தரப்படுவது இருளையோட்டும் (5)
11. அப்படி ஆடு, மாடு இல்லாமல் சுற்றிவர வீட்டில் ஓரிடம் (5)
12. மொட்டைத்தலையை முழங்காலொடு இணைக்க ஒரு தந்திரம்? (3)
14. உள்ளிருக்கும் ஆன்மா சுத்தமில்லை! (2)
16. மையல் கொள்ள அதன் வலிக்காக அவனின்றி அசையும் (5)
17. வேலியின் கதவு மேலே விழுதல் (3)

நெடுக்காக
1. பெண்ணுக்குத் தாய் தந்தையில்லாத ஓரிடம் (4, 2)
2. வேலையில் அதிர்ஷ்டம் இல்லையென்றாலும் தந்திரமான வழிமுறை (3)
3. இன்றைய வஞ்சி பேசுவது (5)
4. விறகு விற்றுக் கொண்டு சேர் (2)
9. கற்பனை தேசம் எல்லைகளின்றி மவுனம் கலைய கலகம் வெளிப்படும் (6)
10. தணலை ஏந்தி ஆண்டவன் முன்னே சுற்றுவது (5)
13. மூவேந்தரில் முதல்வன் கைலி மடித்துக்கட்டிய தாவரம் (3)
15. நல்ல மாடு மேலே சென்றது (2)

நீங்கள் புதிர் மன்னரா?
குறுக்கெழுத்துப் புதிருக்கான சரியான விடைகளை ஆகஸ்டு 25-க்குள் அனுப்பும் முதல் மூன்று வாசகர்களின் பெயர்கள் 'புதிர் மன்னர்கள்' சாதனைப் பட்டியலில் இடம் பெற்று அடுத்த இதழில் வெளிவரும். விடைகளை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: thendral@tamilonline.com. ஆகஸ்டு 25-க்குப் பிறகு, விடைகளை www.tamilonline.com என்ற சுட்டியில் காணலாம்.


ஜூலை 2008 குறுக்கெழுத்துப் புதிர் விடைகள்


© TamilOnline.com