அறை எண் 305-ல் கடவுள்
ஷங்கரின் எஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் வளர்ந்து வருகிறது 'அறை எண் 305-ல் கடவுள்'. இயக்குநர் சிம்பு தேவனுக்கு இது இரண்டாவது படம். முதல் படைப்பு 'இம்சை அரசன் 23ம் புலிகேசி'.

முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார்கள் கஞ்சா கருப்பும், சந்தானமும். இவர்களுடன் பிரகாஷ்ராஜ் நடிக்கிறார். பிரமிப்பூட்டும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. கஞ்சா கருப்புக்கும், சந்தானத்துக்கும் பல நேரங்களில் பிரகாஷ்ராஜ் கடவுளாக வந்து உதவுகிறார் என்துதான் படத்தின் கதை. இசை வித்யாசாகர். முத்துலிங்கம், பா. விஜய், யுகபாரதி, கபிலன் ஆகியேர் பாடல்களை எழுதுகின்றனர். படிப்பிடிப்பு வேகமாக நடந்து வருகிறது.

அரவிந்த்

-

© TamilOnline.com