மார்ச் 2008 : வாசகர் கடிதம்
தென்றல் 'குறுக்கெழுத்துப் புதிரில்' டாக்டர் வாஞ்சிநாதனின் வீச்சு வியக்க வைக்கிறது. நாளுக்கு நாள் மிகச் செறிவுள்ளதாகவும், ஏன், கடினமாகவும் கூட, ஆகி வருகிறது.

V. சந்திரசேகரன், சன்னிவேல், கலி.

*****


நான் கடலூரைச் சேர்ந்தவன். தற்போது டேலி சிடியில் இருக்கிறேன். மாதாமாதம் தென்றலைத் தவறாமல் படிக்கிறோம். நன்றாக உள்ளது.

நீங்கள் 'தினத்தந்தி', 'தினமலர்' போல தமிழில் வெளியிட்டால் நன்றாக இருக்கும்.

ஆல்பர்ட் ஜே. லுர்ஷே, டேலி சிடி, கலி.

*****


ஏழு ஆண்டுகளாக இனிமையாக வீசிக் கொண்டிருக்கும் தென்றல் இன்னும் பல நூறு கோடி ஆண்டுகள் எல்லாத் தமிழர் களுக்கும் சந்தோஷத்தைக் கொடுத்துக் கொண்டு மணம் வீச, என்றென்றும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள். அனைவருக்கும் தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள்.

மைதிலி பார்த்தசாரதி, பாஸ்டன்.

*****


எனக்கு வயது 82. நான் தென்றலை மிகவும் நேசிக்கிறேன். என் வாழ்க்கையில் கிடைக்கும் மகிழ்ச்சிகளில் தென்றல் ஒன்று. தொடர்ந்து தென்றலை அனுப்பவும்.

புஷ்பா சாரி, கலி.

© TamilOnline.com