மிச்சிகன் தமிழ்ச் சங்கம் பொங்கல் விழா
மிச்சிகன் தமிழ்ச் சங்கத்தின் பொங்கல் விழா தமிழ்த் தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழிசை, பரதம், சினிமா பாடல், ஆடல் என்று கலகலப்பாக அமைந்திருந்தது. 'அடுத்தாத்து அம்புஜத்தை' பாடலுக்குக் குழந்தைகள் தடாலடித் திருப்பத்துடன் வழங்கினர். பாட்டின் இறுதியில் பட்டு மாமி 'வேறென்ன செய்வேள்?' என்று கேட்டதும் கிட்டு மாமா 'உன் காலில் விழுவேன்' என்றதும் அரங்கம் சிரிப்பில் வெடித்தது. 'ரெட்டைவால் வெண்ணிலா' பாட்டுக்கான நடனமும் ஒரே கலக்கல்தான். குழந்தைகளின் ரீமிக்ஸ் ஆடல் பாடல் அமோகமான விருந்து.

மொத்தத்தில் முழுநீளத் தமிழ்க் கொண் டாட்டமாக அமைந்திருந்தது இது.

அண்ணாமலை கயிலைநாதன்

-

© TamilOnline.com